10க்கு 8 பேர் இதைத்தான் சொல்றாங்க.!! விருதுநகரில் கொந்தளித்த ராஜேந்திர பாலாஜி.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார்.

அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "மத்தியில் அதிமுக கரம் ஓங்க வேண்டும் என்றால், நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்றால், சிறுபான்மை மக்களுக்கு அனைத்து  உதவிகளும் கிடைக்க வேண்டும் என்றால், பெரும்பான்மை மக்களுடன் சிறுபான்மை மக்கள் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்றால் எதிர் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக நிறுத்தும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 

அதிமுக இளைஞர்கள் கூட்டம் வீறுகொண்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலோ விளையாட்டாக விளையாட்டு ஆட்சி நடந்து வருகிறது. அனைத்து வரிகளும் உயர்ந்து  விலைவாசியும் உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் வரிகள் உயர்த்தப்படாமல், விலைவாசிகள் உயராமல் கட்டுக்கோப்பில் வைத்திருந்தோம்.

ஆனால் திமுக ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி எதுவென்று மக்களில் 10 பேரிடம் கேட்டால் 8 பேர் ஈபிஎஸ் ஆட்சிதான் சிறப்பான ஆட்சி என்று சொல்கிறார்கள். மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajendra balaji said people opinion eps govt best


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->