என்னடா இது ராகுலுக்கு வந்த சோதனை.! வீடு முற்றுகை., காய் குழந்தை உடன் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டை, பஞ்சாப் மாநில அரசு ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரசால் ஆளக்கூடிய பஞ்சாப் மாநிலத்தின் அரசு ஊழியர்களின் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட்டது. இதனை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்வித் துறையில் ஏற்பட்ட தவறு காரணமாக சம்பளம் குறைக்கப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் அரசு மாநில அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்து போராட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் முன்பு, பஞ்சாப் மாநில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில் சிலர் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தியிடம் தங்களது பிரச்சினைகள் குறித்து நேரடியாக தெரிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Teachers Protest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->