I.N.D.I கூட்டணியில் பூகம்பம்.. காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா.. குஷியில் ஆம் ஆத்மி.!! - Seithipunal
Seithipunal


எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி டெல்லியில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும் அதே நேரத்தில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்து களம் காண்கின்றன. 

இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ் குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதோடு தனது‌ எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு பஞ்சாப் முதல்வர் பகவத் மான் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.

இதனால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே‌ மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் போவதாக பகவத் மான் அறிவித்தபோது காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Punjab Congress MLA Raj Kumar joined AAP


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->