பெருமிதம்! தொழிற்சாலையில் அதிகளவில் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் முதலிடம்...! - முதலமைச்சர்
Proud Tamil Nadu ranks first state with highest number women working factories Chief Minister
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,"இந்தியாவின் உற்பத்தி துறையின் மொத்த உற்பத்தியில் 11.9 % தமிழ்நாட்டின் பங்களிப்புள்ளது.

பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-ம் இடத்திலுள்ளது.பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைவு.தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன. தமிழகத்தின் மீதும் சென்னை மீதும் உலக நிறுவனங்கள் வைத்த மதிப்பின் வெளிப்பாட்டால் கண்காட்சியில் பங்கேற்பபோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு நடந்த கண்காட்சியில் 435 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் இந்தாண்டு 468 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.தமிழ்நாட்டிலுள்ள தொழில் முனைவோரில் பெண்களின் அளவு 30 விழுக்காடு. தொழிற்சாலையில் அதிகளவில் பெண்கள் பணிபுரியும் மாநிலங்களில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களில் 42 விழுக்காடு தமிழகத்தை சேர்ந்தவர்கள்.தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலனுக்கு தி.மு.க. அரசு முக்கியமான பணிகளை செய்துள்ளது.MSME-க்கு என தனிப்பட்ட பாலிசி, 4 ஆண்டில் மின் மானியம், ஊதிய மானியம் என ரூ.1000 கோடிக்கு மேல் மானியம் தரப்பட்டது.
தொடர்ந்து ஏற்றுமதி விகிதம் அதிகரித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது" என்றார்.இன்று தொடங்கிய ACMEE 2025 சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Proud Tamil Nadu ranks first state with highest number women working factories Chief Minister