அதிரடி பதிலடி! கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு அரசியல் எதிரிகள் அலாதி இன்பம் கண்டனர்! - முதலமைச்சர்
Political enemies have found immense pleasure in flying the wings of imagination Chief Minister
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான 'எடப்பாடி பழனிசாமி', இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி:
அப்போது அவர் தெரிவித்ததாவது," 3 ஆண்டுகள் தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தவர் முதலமைச்சர். 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் நிதியை பெற்றிருக்கலாம்.அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்" எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இந்த நிலையில், டெல்லி பயணம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,"எனது டெல்லி பயணம் குறித்து ஏதேதோ அளந்து விட்டதை ரசித்தபடியே டெல்லிக்கு புறப்பட்டேன்.
பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களையும் வரவேற்றிட, முதல்வர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினார்.ஆதரவு, எதிர்ப்பு என எதுவாயினும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் இயக்கம் திமுக என இந்திரா காந்தியே சொல்லியுள்ளார்.டெல்லி பயணம் பற்றி கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு அரசியல் எதிரிகள் அலாதி இன்பம் கண்டனர்.
யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்றவர் இபிஎஸ். டெல்லியில் மீடியாக்கள் சூழ்ந்ததும் கட்சி அலுவலகம் வந்ததாக தெரிவித்தவர் இபிஎஸ்.கட்சியை அடமானம் வைத்து கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு.
மாநில உரிமைகளை திமுக ஒரு போதும் விட்டுக்கொடுக்காது" எனத் தெரிவித்துள்ளார்.இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகிறது.முதலமைச்சரின் பதிலடி ஒரு கட்சியின் நலன் கருதிய பதிலடியாக இருக்கும் என்று பலர் தெரிவிக்கின்றனர்.
English Summary
Political enemies have found immense pleasure in flying the wings of imagination Chief Minister