'பொத்தி வைத்த மல்லிகை மொட்டு'., அரைநிர்வாணத்தில் காவல் உதவி ஆணையர் போட்ட குத்து.! - Seithipunal
Seithipunal


மதுரை : ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ஒருவர், அரை நிர்வாண கோலத்தில் மது குடித்த படி, மற்றொரு காவலரை இசை வாத்தியம் வாசிக்கச் சொல்லி, ரசிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மதுரை ஆயுதப்படை காவல்துறை ஆணையராக பணிபுரிந்து வருபவர் சோமசுந்தரம். இவர் அரை நிர்வாண கோலத்தில் மது அருந்திக்கொண்டே, காவலர் ஒருவரை புல்லாங்குழல் ஊத சொல்லி, அதனை ரசித்துக் கொண்டே அவர் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பல்வேறு தரப்பினரும் காவல் உதவி ஆணையர் ஆணையரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த காணொளியில், காவலர் ஒருவர் 'பொத்தி வைத்த மல்லிகை மொட்டு' என்ற பாடலுக்கு புல்லாங்குழல் வாசிக்க., அதனை தலையை அசைத்துக்கொண்டே ஆயுதப்படை காவல் துணை ஆணையர் மது அருந்தும் காட்சி பதிவாகி உள்ளது.

மேலும், அவருடைய இந்த காணொளியில், தடைசெய்யப்பட்ட டிக்டாக் செயலியில், சினிமா பாடல் ஒன்றுக்கு ஆயுதப்படை காவல் துணை ஆணையர் முகபாவனை செய்யும் காணொளியும் இணைத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police man drink and dance in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->