#BREAKING || வேதனையில் மூழ்கிய பிரதமர் மோடி., சற்றுமுன் வெளியிட்ட செய்தி.!
PM MODI Mourning to Fire Crackers Accident death
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில் சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மன் பட்டாசு ஆலையில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்துள்ளனர். மேலும் இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியிலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் -போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், "தமிழ்நாடு விருதுநகரில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்: தீ விபத்தால் உயிர் இழந்தவர்களின் அடுத்த உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
English Summary
PM MODI Mourning to Fire Crackers Accident death