அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய ஓபிஎஸ்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை வானகரம் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனுடைய அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. 

இந்த பரபரப்பான சூழ்நிலைகள் ஓ பன்னீர்செல்வத்தின் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் தனது ஆதரவாளர்களை ஓ பன்னீர்செல்வம் சந்தித்தார்.

இதையடுத்து, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஓ பன்னீர்செல்வம். 9.15 மணிக்கு பொதுக்குழு கூடும் நிலையில், அதிமுக அலுவலகம் செல்கிறார் ஓ பன்னீர்செல்வம்.  ஆதரவாளர்களுடன் ஆலோசித்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் புறப்பட்டார். அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில்,  அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு வழங்கினார். அதன்படி,  அதிமுக பொது குழுவிற்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதிமுக பொது குழுவிற்கு தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் கோரிக்கை விடுத்த நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கப்பட்டு அதிமுக பொது குழுவிற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Case CH Court Judgement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->