பெங்களூருவில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ரத்து.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் சமீபத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் அங்கு கனமழை பெய்து வருவதால் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை பெங்களூருவில் நடத்த திட்டமிட்டது.

அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், பீகார் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் கர்நாடக சட்டபேரவை பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர், கர்நாடகா மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெங்களூரு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எங்கு நடைபெறும் என்பது குறித்தும் முடிவு செய்யப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition party discussion 2nd meeting cancelled


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->