யூகத்தின் அடிப்படையில் கருத்தா...NO ! கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் தெளிவு படுத்தனும் ...! - திருமாவளவன் - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பெரம்பலூரில் குன்னம் அருகே நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

திருமாவளவன்:

அப்போது அவர் தெரிவித்ததாவது,"கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. கூட்டணி குறித்து மத்திய மந்திரி அமித்ஷா மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.

இந்தியா கூட்டணியில் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாக உள்ளது. அதேபோல் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி தான் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியா அல்லது அ.தி.மு.க. தலைமையில் தமிழ்நாட்டில் தனி கூட்டணியா என்ற தெளிவும் தேவைப்படுகிறது.

ஆகவே கூட்டணி தொடர்பாகவும், கூட்டணி ஆட்சி தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும். பா.ம.க. தலைவர் ராமதாஸ், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்திப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது கூட்டணி தொடர்பான சந்திப்பா என்றும் தெரியாது. யூகத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Opinion based on speculation Edappadi Palaniswami should clarify alliance Thirumavalavan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->