சீட்டு தர மறுத்த திமுக.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் போட்டி.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தஞ்சாவூர் மாநகராட்சித் தேர்தலில் திமுகவில் சீட்டு கொடுக்காததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் உள்பட 3பேரும், 3 வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். 32 வது வார்டில் தந்தை செல்வகுமாரும், 33 வது வார்டில் தாய் வனிதாவும், 34 வது வார்டில் மகன் சக்கரவர்த்தியும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One family 3 members in participate in urban local election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->