#BREAKING | தன் சுயமரியாதையை மீட்ட மூதாட்டி மீது வழக்கு இல்லை - காவல்துறை விளக்கம்!
OC TICKET ISSUE POLICE STATEMENT
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்று அளித்த வாக்குறுதியை திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்கள் கழித்து நிறைவேற்றியது.
அதன்படி, தமிழகத்தில் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், இலவசமாக பயணம் செய்த பெண்களை ஓசியில் பயணம் செய்வதாக பேருந்து நடத்துனர், ஓட்டுனர், மற்ற சக ஆண் பயணிகளும்அவமானப்படுத்துவதாக பல புகார்கள் எழுந்தது.
இதற்கிடையே. திமுக கூட்டம் ஒன்றில் இலவச பேருந்து பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில், "நீங்கள் ஓசியில் தானே பயணம் செய்கிறீர்கள்" என்று திமுக அமைச்சர் பொன்முடியே பேசியது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, கோவை அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்த துளசியம்மாள் என்ற மூதாட்டி, "ஓசியில் பயணம் செய்வதாக அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள். காச புடி, டிக்கெட் கொடு. நான் ஓசியில் இனி பயணம் செய்ய மாட்டேன்" என்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கி, முதல் ஆளாக மூதாட்டி தன் சுயமரியாதையை மீட்டெடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
இலவச டிக்கெட் வேண்டாம் என்று வாதம் செய்த துளசியம்மாள் அதிமுகவை சேர்ந்தவர் என்று திமுகவினர் குற்றச்சாட்டிய நிலையில், இன்று துளசியம்மாள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியது.
இந்நிலையில், ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் என்று பேசியது தொடர்பாக மதுக்கரையை சேர்ந்த மூதாட்டி துளசியம்மாள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அதிமுகவை சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவர் மீது மட்டுமே இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
English Summary
OC TICKET ISSUE POLICE STATEMENT