அதிமுகவுக்கு சசிகலா தலைமை தேவை.. ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா பேட்டி.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமை தேவை என ஓ ராஜா பேட்டி அளித்துள்ளார்.

சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக தொண்டர்களை சந்தித்து வருகிறார். திருச்செந்தூர் வந்த சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சசிகலாவை சந்தித்து பேசினர். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் ஓ பன்னீர்செல்வம் சகோதரர் ஓ. ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஓ ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமை தேவை. தனது விருப்பத்தின் படியே சசிகலாவை சந்தித்தேன். 

மேலும், உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கட்சித் தலைமையில் இருந்த அதிமுக ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார். ஆகையால், சசிகலாவின் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

o raja press meet about sasikala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->