நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்.! வேட்புமனுவின் போது பெரும் பரபரப்பு.!
NTK MEMBER ATTACK IN VELLORE
வேட்பு மனு தாக்கலின் போது வேலூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்த உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இம்மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தலுக்காக கடந்த 28ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
முக்கியமான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்ட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் அதிக அளவில் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், ஒரு சில இடங்களில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பதால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், வேலூரில் வேட்பு மனு தாக்கலின் போது நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனு தாக்கலின் போது அதிக அளவில் திமுகவினரை அனுமதிப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த சிலர் நாம் தமிழர் கட்சியினரை அடித்து உதைத்து வெளியே அனுப்பியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தர்மபுரி அருகே நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி, பேச்சாளரை திமுகவினர் தாக்கிய அராஜகம் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
NTK MEMBER ATTACK IN VELLORE