பீகார் அரசு கவிழ்கிறது.!! ஆதரவு கரம் நீட்டும் பாஜக.? அடுத்த முதல்வர் இவர்தான்.!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் முக்கிய பங்காற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் மாதாவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பீகாரில் நடைபெற்று வருகிறது. பீகாரில் நிதீஷ்குமார் முதலமைச்சராகவும் லல்லு பிரசாத் யாதவியின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் உள்ளனர்.

காரணமாக நிதிஷ்குமார் மீண்டும் பாஜக பக்கம் சாய்ந்து உள்ளார். தற்போது ஆதரவு அளித்து வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை கழட்டி விட்டுவிட்டு பாஜகவுடன் மீண்டும் கைக்கு கோர்த்து ஆட்சியை அமைக்க நிதீஷ் குமார் திட்டமிட்டுள்ளார். 

பேச்சு வார்த்தை நிதீஷ் குமார் மற்றும் பாஜக இடையே நடைபெற்ற முடிந்துள்ளதாகவும், பாஜக அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக இன்று இரவு 8 மணிக்குள் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று வழங்க உள்ளார். அதன் பிறகு நாளை மீண்டும் பாஜக ஆதரவோடு மாநில முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் . 

ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியல் மற்றும் தனது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் பட்டியலோடு உரிமை கோரும் நிதிஷ்குமார் நாளை பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitish again form govt in Bihar with BJP supporter


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->