மீண்டும் கட்சியின் இணைவு - கமல்ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறிய அருணாச்சலம், இன்று மீண்டும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இணைந்துள்ளார்.  

இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் A.G. மெளரியா, I.P.S.,(ஓய்வு), விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிறுவனப் பொதுச் செயலாளர் அருணாச்சலம் அவர்கள் நமது தலைவர், கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து இன்று நமது கட்சியில் மீண்டும் இணைந்தார். 

அரசியலில் ஆழங்காற்பட்ட அனுபவம் மிக்க அருணாச்சலம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர் அவர்களால்தான் முடியும் என்பதை உணர்ந்து களப்பணியாற்றியவர். அவர் மீண்டும் நம்மோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தினை பெருவெற்றியடையச் செய்யவேண்டுமெனும் உயரிய நோக்கத்துடன்  உழைக்க வந்திருக்கும் திரு. அருணாச்சலம் அவர்களோடு மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும், அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைத்து நமது கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் A.G. மெளரியா தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Arunachalam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->