மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட காங்கிரஸ் அலுவலகம்: போலீஸ் குவிப்பு! அமேதியில் பதற்றம்.!
UP Amethi congress office attacked
உத்திரபிரதேசம், அமேதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. மேலும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
சத்தம் கேட்ட கட்சி தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்ப்பதற்கு முன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கர் கட்சி அலுவலகத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.
இதனை அடுத்து பலத்த போலீஸ் படை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை சமாதானப்படுத்த முயன்றனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
UP Amethi congress office attacked