அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டும் - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமானம் மூலம் இன்று மதுரை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டெல்லியில் மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஆனால் அணை கட்டுவதை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மேகதாது விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுகவின் திராவிட மடல் ஆட்சியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள் கடமையை செய்ய வந்த அதிகாரிகள் தங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என போலீசார் சொல்வது காமெடியாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் அப்போதுதான் கடமையை செய்ய வரும் அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். 

புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்தது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. ஆனால் சிலர் அதில் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் என்ன ஆனது என்று அவர் தெரிவித்துள்ளார்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthilbalaji should be arrested DMDK Premalatha Vijayakanth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->