#நாமக்கல் || பாஜகவின் வாகன பேரணியில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அமைச்சர் இன்று நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி ராமலிங்கத்தை ஆதரித்து வாகனப் பேரணையில் ஈடுபட உள்ளார். 

விமான மூலம் சேலம் வரும் ராஜ்நாத்சிங் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள பிஜிபி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் அவர் அங்கிருந்து பிற்பகல் 12 மணிக்கு நாமக்கல் எம்.ஜி.எம் தியேட்டர் அருகே துவங்கும் வாகன பேரணியில் கலந்து கொள்கிறார்.

இந்த வாகன பேரணியானது நாமக்கல் பேருந்து நிலையம் வரை சென்று முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சி முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திருவாரூர் செல்கிறார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி சேலம் டிஐஜி உமா தலைமையில் நேற்று நடைபெற்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Rajnath Singh participate in BJP road show in namakkal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->