என்னது...! அமைச்சரின் அரசு துப்பாக்கி தாதாவிடம்...! டக்ளஸ் தேவானந்தா கைது...!
minister official gun gangster Douglas Devananda arrested
இலங்கை முன்னாள் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடந்த 2001-ம் ஆண்டு அரசு அனுமதியுடன் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ துப்பாக்கி, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமீபத்தில் ஒரு பிரபல தாதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, அந்த துப்பாக்கி அவரது வசம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட அரசு துப்பாக்கி எப்படி குற்ற உலகத்துக்குச் சென்றது என்ற கேள்வி எழுந்து, சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும் சட்ட அமலாக்கத் துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரடி விசாரணை நடத்த நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற குற்ற புலனாய்வு துறை (CID) போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.
English Summary
minister official gun gangster Douglas Devananda arrested