திமுக உட்கட்சி தகராறு: அமைப்பாளரின் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல்., திமுக வட்டச் செயலாளர் மகன் கைது.!
madurai dmk two teams engaged in a brutal attack on each other
மதுரையில் திமுகவின் அமைப்பாளர் மற்றும் வட்டச் செயலாளரிடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் மிகப்பெரிய தாக்குதலாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஆர் எம் எஸ் காலணியை சார்ந்தவர் மணிகண்டன் இவர் திமுக பொறியாளர் அணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இவருக்கும் மதுரை 73 வது திமுக வட்டச் செயலாளர் விஜய் சேகர் என்பவரின் குடும்பத்தினருக்குமிடையே உட்கட்சி பூசலிருந்து வந்திருக்கிறது. மதுரை மாநகராட்சி தேர்தலின் போது 73 வது வார்டில் போட்டியிட விஜய் சேகர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வார்ட் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது 73 வது வார்டில் மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்தவராகயிருந்து வருகிறார். இது தொடர்பாக அமைப்புச் செயலாளர் மணிகண்டனுக்கும், விஜயசேகருக்கும் இடையே மோதலிருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் உச்சகட்டமாக திமுக வட்டச் செயலாளர் விஜய் சேகரின் மகன் விஜய் பாபு தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டன் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை விஜயபாபுவை கைது செய்திருக்கிறது. மேலும் விஜய் சேகர் உள்ளிட்ட பலரையும் தேடி வருகின்றனர்.
English Summary
madurai dmk two teams engaged in a brutal attack on each other