கொடநாடு விவகாரத்தில் நிரந்தர தடை! ஈபிஎஸ்-க்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புப்படுத்தி பேச அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜன் சகோதரர் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது. 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த கனகராஜன் சகோதரர் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது தனக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்த நிலையில் மற்றொரு வழக்கில் சிறை சென்ற அவரை ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனபால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார். 

இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னுடைய பெயரை தொடர்பு படுத்தி பேசுவதற்கு தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் தனபாலிடமிருந்த 1.1 கோடி ரூபாய் நிவாரணமாக பெற்று தர வேண்டும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு படுத்தி பேச தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அமர்வின் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு அப்போது வழக்கு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய இருப்பதால் வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், தனபாலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றுவதாகவும் உத்தரவிட்டு வழக்கில் விசாரணை ஒத்தி வைத்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC prohibits Dhanapal from talking to EPS in KodaNadu case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->