ஓ பன்னீர்செல்வத்திற்கு முதல் வெற்றி.. அதிர்ச்சியில் இபிஎஸ் அணியினர்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கட்சிக்கு விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஓ பன்னீர்செல்வம், அவரது இரு மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். 

அதன்பிறகு, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் கட்சியிலிருந்து ரவீந்திரநாத் நீக்கப்பட்டிருப்பதால், மக்களவையில் அவருக்கு அதிமுக எம்பி என்ற அந்தஸ்தை கொடுக்க வேண்டாம் என தெரிவித்து இருந்தார்.

ஆனால், அதிமுக உட்கட்சி தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலைமையில் உள்ளதால் இறுதி முடிவு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி மக்களவை சபாநாயகருக்கு ரவீந்திரநாத்தும் கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து,  பாராளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க வேண்டும். உட்கட்சி விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

பொய்யான குற்றச்சாட்டு கூறி, கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக ரவீந்திரநாத்தை நீக்கி உள்ளனர். இவை எதுவும் கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை. எனவே, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் அதிமுகவிற்கு மக்களவையில் உறுப்பினர்கள் யாரும் இல்லை என்ற நிலை ஏற்படும். இது குறித்து புதிய தகவல் வெளியாளியுள்ளது. ரவீந்திரநாத்தை நீக்கிய கடிதம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதேபோல் அதிமுகவுக்கு ஒரு மக்களவை உறுப்பினர் இருப்பதாக மக்களவை இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களவை ஆவணங்களின்படி ரவீந்திரநாத் அதிமுக உறுப்பினர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 

இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் செல்வராஜ் கூறியதாவது, அதிமுகவின் ஒரே மக்களவை எம்பியான  ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதனால் அவரை அதிமுக எம்பியாக கருதக்கூடாது எனவும் மக்களவை சபாநாயகருக்கு  எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. அதேசமயம், ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் ஏற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Loksabha speaker accepted ops letter


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->