"மகளிருக்கு மாதம் ₹2,000... அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதிரடி": ஆர்.பி. உதயகுமார் வாக்குறுதி!
Legacy vs Liability RB Udhayakumar Rips Into DMK Governance
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற அதிமுகவின் 'திண்ணை பிரசாரத்தில்' கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைச் சாடியதுடன், அதிமுகவின் புதிய தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தார்.
அரிசி, பருப்பு, பால் முதல் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி வரை அனைத்தையும் உயர்த்தி மக்களைத் திமுக அரசு வஞ்சித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகராக இருந்த தமிழகக் காவல்துறை இன்று கைகட்டி நிற்கிறது" என்று சாடிய அவர், பள்ளி - கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.
கூட்டணி நெருக்கடி: திமுக கூட்டணியில் தற்போது குழப்பமும், நெருக்கடியும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவின் சாதனைகளும் 2026 வாக்குறுதிகளும்:
எடப்பாடியார் கொண்டு வந்த 7.5% உள் இட ஒதுக்கீடு மற்றும் ஜெயலலிதா வழங்கிய 52 லட்சம் மடிக்கணினிகளைச் சுட்டிக்காட்டிய உதயகுமார், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தப்பட உள்ள முக்கிய திட்டங்களைப் பட்டியலிட்டார்:
மகளிர் உதவித்தொகை: குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ₹2,000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
அம்மா இல்லம் திட்டம்: வீடற்ற அனைவருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக Vs மக்களைத் தெய்வமாக மதிக்கும் அதிமுக - இதுவே 2026-ன் தேர்தல் முழக்கம்" என ஆர்.பி. உதயகுமார் தனது பேச்சில் தெளிவுபடுத்தினார்.
English Summary
Legacy vs Liability RB Udhayakumar Rips Into DMK Governance