தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சவால்! 23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று 23 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கேள்விகளை எழுப்பி வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆட்சியை கைப்பற்றிய தவெக அரசு, தற்போது தொடர்ச்சியாக நடைபெறும் குற்றச் சம்பவங்களால் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

சென்னையில் மூதாட்டி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை, கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் காவல்துறையினரால் சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் விவகாரம் உள்ளிட்ட பல சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், காவல்துறையால் குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததற்கான காரணங்களாக இரண்டு முக்கிய அம்சங்கள் பேசப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் செயல்பட்டு வந்த சிறப்புப் படைகள் கலைக்கப்பட்டதும், தினசரி சூழ்நிலை அறிக்கைகள் எனப்படும் டி.எஸ்.ஆர் (DSR) அறிக்கைகளில் உண்மை நிலவரங்கள் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அதில் அடங்கும்.

மாவட்டங்களில் குற்றத் தடுப்பு மற்றும் ரவுடிசம் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிறப்புப் படைகள், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்களைத் தொடர்ந்து கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குற்றவாளிகளை விரைந்து கண்டறியும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதேபோல், மாவட்டங்களிலிருந்து மாநில காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்படும் தினசரி சூழ்நிலை அறிக்கைகளில் உண்மை நிலவரங்கள் முழுமையாக இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதனால் மாநில அளவிலான காவல்துறை நிர்வாகத்திற்கு சரியான தகவல்கள் சென்றடையாமல், முன்கூட்டிய நடவடிக்கைகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமையை மேம்படுத்த அரசு மற்றும் காவல்துறை விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் வலுத்து வருகிறது. புதிய அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏற்ப குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Law and order challenge in Tamil Nadu In 23 days 20 sexual assaults This is where Vijay Kottai left off


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->