பணம் வாங்கியது உண்மை தான்..."சொன்னால் வெட்க கேடு".. ஆடியோ குறித்து கே.பி முனுசாமி விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


அதிமுக இணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்காக ரூ.1 கோடி பேரம் பேசியதாக ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் கிருஷ்ணமூர்த்தி 50 ரூபாய் தயாராக இருப்பதாகவும் மீதம் 50 ரூபாய் மாலைக்குள் தயார் செய்து விடுவதாகவும் பேசி இருந்தார்.

மேலும் கே.பி முனுசாமி இந்த பணத்தைப் பெற்றுக் கொள்ள தனது மகனை அனுப்பி வைப்பதாகவும் பேசி இருந்தார். இது தொடர்பான ஆடியோவை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ள அதிமுக இணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி "பணம் வாங்கியது உண்மைதான். அதற்கான காரணம் வேறு" என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "கிருஷ்ணமூர்த்தி எல்லாம் ஒரு ஆளு என்று அவர் பேசியதற்கு பதில் சொன்னால் மரியாதை இருக்காது. மாவட்டச் செயலாளர் பதவியை யார் கொடுக்கிறார்கள்..? அவர் மனசாட்சியோடு நேராக என் முன் வந்து இதை சொல்லட்டும்.

அதிமுகவில் என்னோடு இருந்தவர் அவர், தேர்தல் செலவுக்காக கடனாக பணம் வாங்கி இருந்தேன். அது குறித்து பேசிய ஆடியோவை தற்பொழுது மாற்றி இவ்வாறு வெளியிட்டுள்ளார். இதுவரை அதிமுகவில் அதிகாரமிக்க பதவியில் இருந்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஒரு ரூபாய் கூட நான் வாங்கியது இல்லை.

அதிமுகவில் இருக்கும் பலருக்கு பதவியை வாங்கிக் கொடுத்தும் இதுவரை நான் பணம் வாங்கியது இல்லை. இந்த அளவிற்கு கேவலமாக இருப்பார்கள் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை.

நான் பேசிய விஷயத்தை பதிவு செய்து தற்பொழுது இதற்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார் என்றால் எந்த அளவிற்கு அவர் கேவலமானவர் என்பதை நீங்களே எண்ணி பாருங்கள். தேர்தல் பணியின் பொழுது கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்னுடன் தான் இருந்தார். 

தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் பணம் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு பணம் கொடுக்கவில்லை. அதனால் எனக்குத் தெரிந்த அனைத்து நண்பர்களிடமும் பணம் கேட்டு இருந்தேன். இவரிடமும் தேர்தல் செலவுக்காக கடனாக பணம் கேட்டிருந்தேன்.

என்னுடைய கேரக்டர் பற்றி ஓபிஎஸூக்கே தெரியும். இவரால் ஓபிஎஸ் ஒரு நாள் பாதிக்கப்படுவார். நான் பணம் வாங்கியது உண்மைதான். அந்த ஆடியோவில் பேசியது நான்தான். ஆனால் தேர்தல் செலவுக்காக வாங்கிய பணத்தை இவ்வாறு மாற்றிப் பேசும் அளவுக்கு கேவலமானவராக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளார்" என தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோ விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KP Munusamy explains on audio released by Kolathur Krishnamurthy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->