கரூர் விபத்து வழக்கில் திருப்பம்: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு மீண்டும் சி.பி.ஐ. அழைப்பு...!
Karur accident case tvk leader Vijay again called by CBI
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ஏற்கனவே இரண்டு முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

அதேபோல், த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் சி.பி.ஐ. முன்பு முன்னதாகவே ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் தொடர்ச்சியான விசாரணைக்காக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மீண்டும் ஆஜராகுமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இதன் பேரில் அவர் நாளை விசாரணைக்கு முன்னிலையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று மறுதணிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவரின் உடல்நலக் குறைவு காரணமாக படம் பார்ப்பது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதே நேரத்தில், வரவிருக்கும் அரசியல் மாற்றங்களை முன்னிட்டு விஜய் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்ற அழுத்தம் சில அரசியல் வட்டாரங்களில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கரூர் வழக்கு தொடர்பாக விஜய்க்கு மீண்டும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பப்பட்டிருப்பது அரசியல் பின்னணியுடன் கூடிய நடவடிக்கையாக இருக்கலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Karur accident case tvk leader Vijay again called by CBI