எத்தனை முறை? சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் டிவிட்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்பி.,யும், பா சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரத்தின் வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கார்த்திக் சிதம்பரம் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

வெளியான முதல்கட்ட தகவலின்படி, கார்த்திக் சிதம்பரத்தின் தொடர்புடைய நிறுவனங்களுக்கு (அன்னிய செலாவணி) வெளிநாட்டிலிருந்து பணம் வந்தது குறித்து தற்போது விசாரணை நடந்து கொண்டிருப்பதாக, சிபிஐ அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இந்த சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், "எத்தனை முறை தான் சோதனை நடக்கும்? நான் எண்ணிக்கையை இழந்துவிட்டேன், ஒரு பதிவாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthik chidaamparam twit about cbi raid


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->