இ.பி.எஸ்ஸுக்காக தீச்சட்டி எடுக்கப் போகும்.. பிரபல தமிழ் நடிகர்.! அவரே கூறிய தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் பங்குனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள  கந்தசாமி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மற்றும் பால்குட விழா நடைபெற்றது.

இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர்  கஞ்சா கருப்பு சுவாமி தரிசனம் பற்றி  அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த செய்தி குறிப்பில் தற்போது  அதிமுகவில் அங்காளி பங்காளி சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சண்டை விரைவில் முடிவுக்கு வரும்  அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து இணைவார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும் தற்போதுள்ள ஆட்சியில் மின்சார கட்டணம் மற்றும் வீட்டு வரி உயர்த்தப்பட்டதை சுட்டி காட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்தல் செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அடுத்த தேர்தலில் முதல்வராக வருவதற்கும் தற்போது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கும்  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanja karuppu emotional about eps will carry fire pot for eps


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->