ராகுலுடன் கனிமொழி கை கோர்த்தத்தில் புதிய சர்ச்சை..!!
Kanimozhi participation in Rahul padayatra create controversy
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை பாதயாத்திரை தற்பொழுது டெல்லியை அடைந்துள்ளது. இந்த பாதயாத்திரைகள் காங்கிரசை ஆதரிக்கும் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் நடந்த பாதையாத்திரையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
யாத்திரையில் பங்கேற்ற கனிமொழி ராகுலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த விஷயத்தில் திமுகவின் மற்ற எம்பிகளுக்கு வருத்தம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களையும் பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்கு அழைத்துச் சென்று இருக்கலாம் என முணுமுணுக்கின்றனர்.
ராகுலுடன் பாதயாத்திரையில் பங்கேற்க போகிறேன் என கனிமொழி திமுக எம்பிகளுக்கான வாட்ஸ் அப் குரூப்பில் தெரிவித்து இருக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்திருந்தால் நாங்களும் இந்த யாத்திரையில் பங்கேற்று இருப்போம். நாங்களும் ராகுலுடன் போட்டோ எடுத்திருந்தால் வெளிவந்திருக்கும் என மற்ற எம்பிக்கள் வாட்ஸ் அப்பில் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு கனிமொழி "ராகுலின் யாத்திரை டெல்லிக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பங்கேற்றுக் கொள்ளுங்கள் என காங்கிரஸிலிருந்து எனக்கு போன் வந்தது. அதனால் நான் சென்றேன்" என பதில் அளித்ததாக தகவல் கசிந்துள்ளது. அதேபோன்று மதுரை விமான நிலையத்தை விரிவுபடுத்த கோரி மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த சந்திப்பின் பொழுது திமுகவின் மூத்த எம்.பி டி.ஆர் பாலுவை ஏன் அழைத்துச் செல்லவில்லை என திமுகவின் எம்பிக்கள் சிலர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. திமுகவினரின் இத்தகைய நடவடிக்கைகள் கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
English Summary
Kanimozhi participation in Rahul padayatra create controversy