இது நம்பிக்கை துரோகம்! திமுக எம்.பி., கனிமொழி பரபரப்பு பேட்டி!
kanimozhi mp press meet about agri bills
நடந்துமுடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு, வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களுக்கும் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மத்திய அமைச்சர் ஒருவர் இந்த மோசோதாவை எதிர்த்து பதவி விளக்கியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி அசாத், எதிர்க்கட்சிகள் சார்பில் இந்திய ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 28ம் தேதி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பிலும், தமிழகத்தில் திமுக சார்பிலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வேளாண் மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழக முதல்வர் இந்த வேளாண் மசோதா குறித்து திமுக உள்ளிட்ட அனைவருக்கும் விளக்கம் அளித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி., கனிமொழி, "வேளாண் மசோதாக்களை அனைவரும் எதிர்த்து வருகின்றனர். திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி போராட்டத்தை அறிவது உள்ளது. மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
இதன் பின்னும் கூட, தான் ஒரு விவசாயி என சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண் மசோதாக்களை ஆதரித்திருப்பது விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்" என கனிமொழி பேட்டியளித்துள்ளார்.
English Summary
kanimozhi mp press meet about agri bills