குடியுரிமையை காத்து கொள்ளும் நேரம் தான் இது - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தார். 

அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் சென்று பிரசாதம் செய்த பின்னர் விழுப்புரம் கோட்டகுப்பத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். 

இதற்கு முன்பு புதுச்சேரி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரை நானும் மக்களில் ஒருவன். 

இதனால் என்னுடைய நிலை தான் பொதுமக்களுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இப்போது முக்கியம் நம்முடைய குடியுரிமை, அரசியலமைப்பு உள்பட எல்லாவற்றையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. 

இந்தியன் என்பதும் தமிழ் என்பதும் தான் இன்று எனக்கு பிரதானமாக உள்ளது. நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டு பணி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->