#சற்றுமுன் : பாமக தலைமை வெளியிட்ட செய்தி.!  - Seithipunal
Seithipunal


வரும் 14.12.2021 செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட பா.ம.க ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் , இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பங்கேற்க உள்ளதாகவும் பாமக தலைமை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அந்த செய்தில், "விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த நவம்பர் 28ஆம் தேதி காலை விழுப்புரம் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், மழை காரணமாக அக்கூட்டம் ஒத்திவைக்கப் பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டக் கூட்டம் வரும் 14.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு விழுப்புரத்தில் சென்னை  நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தா திருமண அரங்கில் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அதற்கு முன்பாக 10.12.2021 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை,  சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள பாப்பாத்தி அம்மாள் திருமண அரங்கத்தில் நடைபெறும். 

இந்த இரு ஆலோசனைக் கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kallakuruchi and vilupuram pmk meeting announce


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->