#BREAKING: திமுகவுடன் தொகுதி பங்கீடு வெற்றி.,  வெற்றி., கே எஸ் அழகிரி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல்கட்ட பேச்சு வார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் என்று தொகுதி பங்கீடு பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்து நடந்தஇரண்டாம் கட்டமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே எஸ் அழகிரி தெரிவித்ததாவது, 

"திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து மிகவும் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளோம். இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இரண்டு தரப்பிலும் சுமுகமாக நடந்து உள்ளது.

விரைவில் மேற்கொண்டு என்ன செய்வது, எப்படி நடத்துவது, எவ்வளவு தொகுதியில் என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம். இன்றைய கூட்டத்தில் முடிவு மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனை தொகுதிகள் என்பதில் எந்த தாமதமும் இல்லை.

நாளை அல்லது நாளை மறுநாள் இறுதியாக அறிவிப்போம். மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. அனைத்தும் பேசி முடிவாகிவிட்டது. எங்களுடைய கருத்துகளை நாங்கள் சொல்லி உள்ளம். அவர்களுடைய கருத்தை அவர்கள் சொல்லியுள்ளனர்,
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K S ALAGIRI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->