வாரிசு அரசியல் இல்லாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான் - ஜே.பி நட்டா.! - Seithipunal
Seithipunal


வாரிசு அரசியல் இல்லாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான் என பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகளை பாராட்டி பேசினார்.

அப்போது பேசிய அவர்,  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த 2014 முன்பு இந்தியாவில் 2ஜிமற்றும் 3ஜி ஊழல்கள் நிறைந்திருந்தது.

மேலும், இந்தியா ஊழல் நாடாக அறியப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும் உலக அளவில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பாஜக உள்ளதாகவும் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சிகளாக மாறிவிட்டது. வாரிசு அரசியலில் இருந்து விடுபட்ட ஒரே கட்சி பாஜக தான் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Natta said BJP is not family party


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->