#BigBreaking | அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு - அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை : துரைப்பாக்கம் பகுதியில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும், அவரின் சகோதரர் மகேஷ்குமாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இதில், தனது செல்வாக்கை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாக மகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மகேஷ் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார், மகள், மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் கைது செய்யபட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நிலையில், இன்று நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

ஜெயக்குமாரின் மருமகனின் சகோதரனின் சொத்துக்களை அபகரித்த புகாரில் முன்னாள் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜெயக்குமார் மற்றும் அவரது மகள், மருமகன் நவீன் குமார் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jeyakumar case issue chennai hc order sep


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->