திமுக எம்பி ஜெகத்ரட்சகன் எங்கே? சுத்து போட்ட IT அதிகாரிகள்! அடையாறில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை 6:00 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர், 3வது தெருவில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 12 வருமானவரித்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அடையாறில் உள்ள தனது வீட்டில் இருப்பதால் சுமார் 150-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அடையாறு பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், கல்லூரி, தொழில் நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT raid in Jagadratsagan house with 150 police protection


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->