வேதனை! பெங்களூரில் உயிரிழந்தவர்களின் துயரச் சம்பவத்திற்கு வருந்துகிறேன்...! - கமல்ஹாசன் - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம்பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ''RCB IPL '' வெற்றி கொண்டாத்திற்காக கூட்டம் கூடியது.இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,  50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.இதில் அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான ''கமல்ஹாசன்'' இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்:

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்ததாவது, "பெங்களூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சனை தற்போது இணைய வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.மேலும், RCB விளையாட்டு வீரர்களையும்  மக்கள் கடுமையா பேசி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I saddened by tragic incident those who lost their lives in Bangalore Kamal Haasan


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->