உண்மையை சொல்லுங்க சுவாதி., கோகுல்ராஜ் வழக்கில் நீதிபதிகள் தொடர்ந்து வலியுறுத்தல்!
Gohul Raj Case Swathi Info HC Divition
சேலம் : ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாரின் விசரணையில், சுவாதி என்ற இளம்பெண்ணை கோகுல்ராஜ் காதலித்ததாகவும், அதனால், ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் வழக்காக பதிவு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி, இந்த வழக்கில் கைதான பத்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், ஐந்து பேரை விடுதலை செய்தும் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் உண்மையை மறைப்பதும் அவமதிப்பு தான் என்று பிறழ்சாட்சியாக ஆஜரான சுவாதியிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வாழ்க்கையில், நியாயம், தர்மம், சத்தியம் முக்கியம் என சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர். உங்கள் புகைப்படத்தை பார்த்து நீங்களே தெரியவில்லை என்று சொல்கிறீர்கள். இதை எப்படி ஏற்பது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
விசாரணையில் சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அப்போது உண்மையை கூறுமாறு சுவாதியிடம் தெரிவித்தனர்.
English Summary
Gohul Raj Case Swathi Info HC Divition