அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்ட கலை பிரிவு செயலாளர் இருந்து வரும் அழகரசன் விஜய் என்பவர் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடுடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆதரவாக செயல்பட்டு கட்சியில் குழப்பம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அழகரசன் விஜயை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

திருச்சி மாநகர் மாவட்ட கலை பிரிவு செயலாளர் ஜெ.அழகரசன் விஜய் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தின் உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS ordered to remove AIADMK trichy district secretary


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->