ஓ பன்னீர்செல்வத்திற்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு.. எடப்பாடி பழனிச்சாமியின் புதிய திட்டம்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். 

தன்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என கூறிய பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொது குழுவில் ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்த பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாரிடம் கொடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். அதிமுகவிற்கு சட்டமன்றத்தில் 65 உறுப்பினர்கள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அணியில் 62 பேரும், ஓ பன்னீர்செல்வம் அணியில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூவர் மட்டும் இடம்பெற்றுள்ளனர்.  

இதனால் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து புதிய எதிர் கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுப்பதற்காக சென்னையில் தனியார் ஓட்டல் ஒன்று எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் புதிய எதிர் கட்சி துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps new plan for ops posting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->