மேயர், துணை மேயர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தேதி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, அப்போது பதிவான வாக்குகள் கடந்த 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றியது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றியுள்ளது. 21 மாநகராட்சிகளிலும் திமுக தன் வசமாக்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், மேயர் மற்றும் துணை மேயர் மறைமுக தேர்தலுக்கான தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் மார்ச் 4 ஆம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயரான மறைமுக தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election date of mayor and deputy mayor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->