கத்தை கத்தையாக சிக்கிய பணம்.! தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிரடி.!  - Seithipunal
Seithipunal


சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூபாய் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவல்லிக்கேணி பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த திமுகவின் கட்சிக் கொடிகளை தேர்தல் பறக்கும் படையினர் அகற்றினர்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில், அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. உரிய ஆவணங்கள் இன்றி யாரும் பணம் எடுத்து எடுத்து செல்கிறார்களா., வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் ஏதுனும் எடுத்து செல்லப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதியில்லாமல் அறந்தாங்கியில் 75 ஆயிரம் ரூபாய் எடுத்து சென்றதால், அந்த பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கத்தை கத்தையாக 50 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. இதுபோல் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission raid in cuddalore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->