எக்குத்தப்பா கேள்விகேட்ட செய்தியாளரிடம்., எடப்பாடி பாய்ச்சல்.! ஆடிப்போன நிருபர்.,எழுந்த கரகோஷங்கள்.!  - Seithipunal
Seithipunal


முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது நீட் தேர்வில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து நீங்கள் பெருமை பேசுகிறீர்கள் என்று நிருபர்கள் கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி பொங்கி எழுந்து, "நாங்கள் இது குறித்து பெருமை பேசவில்லை. பெருமைப்படுகிறோம். 

தவறாக புரிந்துகொண்டு கேள்வி எழுப்புகிறீர்கள். ஒரு நிருபர் என்பவர் நடுநிலையாக, சரியாக கேள்வியை கேட்க வேண்டும். நீங்கள் தவறான கேள்வியை கேட்கிறீர்கள். 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? 

இதற்கு முன்பு நடந்த ஆட்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்கள் என்று தெரியுமா? நான் கிராமத்திலிருந்து வந்தவன். அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது குறித்து நான் பெருமையாக பேசவில்லை மாறாக பெருமைப்படுகிறேன்." என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் முதல்வரை சுற்றியிருந்தவர்கள் அவருக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

edappadi asking questions to reporter


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->