2021 ஆம் ஆண்டு இவர்தான் ஆட்சியை பிடிப்பார்? வெளியான பரபரப்பு தகவல்.!
edappadi angry speech
வரும் 2020 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அதற்கான அரசியல் வியூகங்கள் மற்றும் அறிக்கைகளை தயார் செய்து வருகின்றனர்.
மக்களை கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே மு.க. ஸ்டாலின் 2020ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறி வருகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அதிலிருந்து சாந்தமாகவும், சிரித்த முகத்துடனும் பேட்டி அளிப்பது வழக்கம். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், முதலமைச்சர் ஆவேசத்துடன் பேசி திமுகவினரை கதிகலங்க செய்தார். அப்போது எடப்பாடியின் புதிய முகத்தை பார்த்து அனைவரும் மிரண்டு போனார்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஜோசியரை சந்தித்தபோது, வரும் 2021 தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் எனவும், முக ஸ்டாலினுக்கு முதலமைச்சராகவும் யோகம் இல்லை எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எம்எல்ஏ பிறகு அமைச்சர் அப்படியே முதலமைச்சர் ஆகிவிடுவார் என அந்த ஜோசியர் சொன்னது பலித்தக்காகவும். தற்போது கூறியதும் பலிக்கும் எனவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.