சிவகாசி பட்டாசு ஆலை விபத்து.. மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.!
Dr Ramadoss Regret to Sivakasi Kalaiyarkurichi Fire Accident Peoples Died
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டில், " சிவகாசியை அடுத்த காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உலகத்தர மருத்துவம் வழங்குவதுடன் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
சிவகாசி பகுதியில் இந்த மாதத்தில் நிகழ்ந்த மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது என்பது அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு பட்டாசு ஆலைகள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Regret to Sivakasi Kalaiyarkurichi Fire Accident Peoples Died