ஈரோடு வடக்கு பாமக செயல்வீரர் நல்லையன் மரணம் | டாக்டர் இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


ஈரோடு வடக்கு மாவட்டம் : பாமக செயல்வீரர் ஜம்பை நல்லையன் மறைவுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "ஈரோடு வடக்கு மாவட்டம் ஜம்பை பேரூராட்சிக்குட்பட்ட நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர் நல்லையன் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

நல்லையனுக்கு 87 வயதானாலும் இளைஞரைப் போன்று துடிப்புடன் கட்சிப் பணியாற்றியவர். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து சங்கத்திலும், பின்னர் கட்சியிலும் இணைந்து பணியாற்றி வந்த நல்லையன், இரு அமைப்புகளின் சார்பிலும் அறிவிக்கப்பட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர். என் மீது மிகுந்த பற்று கொண்டவர்.

நல்லையனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட பாமகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இடங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Mourning to Nallaiyan death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->