42 தமிழக மீனவர்களை சிங்களப்படை கைது - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


42 தமிழக மீனவர்களை சிங்களப்படை கைது செய்தது  கண்டிக்கத்தக்கது; விடுதலை செய்ய நடவடிக்கை தேவை என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்த சிங்களக் கடற்படை அவர்கள் பயன்படுத்திய 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!

அண்மைக்காலங்களில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 42 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும்,  அவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இராமேஸ்வரம் - இலங்கை இடையிலான குறுகிய கடல் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டுவது இயல்பானது. இது இரு தரப்பிலும் நடக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss warn for Tamil Fisher man Arrest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->