நாம் தமிழரை கோடரியால் வெட்ட வந்த திமுக ரவுடி.! பெரும் பரபரப்பு .!
dmk vijayakumar attack naam thamilar party membar
நாம் தமிழர் கட்சியை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல், ஆபாசமாகவும், கொடிகளை பிடுங்கி எறிந்தும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தின் உள்ளே புகுந்த திமுக பிரமுகர் ஒருவர், நாம்தமிழர் கட்சியின் கொடிகளை பிடுங்கி எறிந்து, அவர்களை பிரச்சாரம் மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் திமுக பிரமுகரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள விண்ணமங்கலம் ஊராட்சியில், 16வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு நாம் தமிழர் கட்சி சாராபாய் போஸ் குமார் போட்டியிடுகிறார். இவர் அந்த பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகரான விஜயகுமார், அவர்களை வழிமறித்து மதுபோதையில் அவதூறாக பேசி, ஆயுதங்களை கொண்டு தாக்குதல் செய்ய முயற்சி செய்துள்ளார். மேலும், வாக்கு சேகரிப்பு மேற்கொள்ளாமல் தடுத்தது மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சியின் கொடிகளை பிடுங்கி எறிந்து, கையில் பயங்கரவாதத்துடன் தாக்க முயற்சித்தார்.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையிடம் புகார் அளித்து அவரை கைது செய்ய கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து திமுக பிரமுகர் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
dmk vijayakumar attack naam thamilar party membar