திமுக அரசு இந்து மத வெறுப்பால் மண்ணைக் கவ்வுகிறது...? - பாஜக தலைவர் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டதாவது,"திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டி பகுதியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவில் மீது திமுக அரசு இடைஞ்சல் நடத்த முயற்சித்தது, அதையொட்டி கோவிலை காப்பாற்ற வந்த இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நிகழ்ந்தது.

இது வன்மையாக கண்டிக்கக்கூடியது.நாகேந்திரன் வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்:மதச்சார்பில்லாத போர்வையில் கோவில்களை காப்பாற்றும் பக்தர்களைத் தாக்குவது,குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற மறுப்பு.

அறுபடைவீட்டைப் சுடுகாட்டுடன் ஒப்பிடுவது,திருத்தேரோட்டத்தில் பக்தர்களை வசைபடுத்தல்,கோவிலுக்கு செல்வதை அநாகரீகமாக புனைத்தல்,சனாதன தர்மத்தை அடிப்படை அறிவில்லாமல் கொடூர நோய்களுடன் ஒப்பிடுதல்.

நாகேந்திரன் கடுமையாக கூறியதாவது,"திமுக அரசு தனது இந்து மத வெறுப்பால் மண்ணைக் கவ்வும் வகையில் நடவடிக்கை எடுக்கிறது. இந்து விரோதப் போக்கை தொடர்வது சமூகத்திற்கும் மத அமைதிக்கும் பெரிய அச்சுறுத்தலாகும்.”


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK government facing defeat hatred Hinduism BJP leader strongly condemns


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->